Home City செஸ் உலகக் கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

செஸ் உலகக் கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

0
      'பிடே'  உலகக்  கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும்,   'நம்பர் ஒன்' வீரரும்,   5  முறை   உலக சாம்பியனுமான      மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
       இந்த    இறுதிப்போட்டியின் முடிவில், முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன்  வெற்றி   பெற்றார். இந்நிலையில்,   செஸ்  உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்       வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர்        பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
       2023ம் ஆண்டின் செஸ் உலகக்கோப்பையில்     சிறப்பான ஆட்டத்தை     வெளிப்படுத்திய சென்னையின்      பெரும் பிரக்ஞானந்தாவிற்கு       மனமார்ந்த வாழ்த்துக்கள். உலகின் நம்பர் 2 வீரரான நகமுரா மற்றும் நம்பர் 3 வீரரான      கருவானாவை தோற்கடித்து,     இறுதிப் போட்டிக்கான பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இறுதி முடிவு இருந்தபோதிலும்,      உங்கள் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலித்தது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா! நீங்கள் பெற்ற வெள்ளிப் பதக்கம் மற்றும் செஸ் உலகக்கோப்பை போட்டிக்கான நுழைவு ஆகியவை வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்.

Exit mobile version