Saturday, May 18, 2024

பாதாம் பால் பூரி

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
கோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 10
மஞ்சள் நிற கேசரி பவுடர் – 1 சிட்டிகை
பாதாம் எசன்ஸ் – 4 துளிகள்
குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, அதில் நெய், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்க்கவும். பின்பு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • பின் பாதாமை சுடுநீரில் 1 மணி நேரம் ஊற வைத்து, அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு, பின் அதனை மிக்ஸியில் போட்டு பால் சிறிது சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் அந்த பேஸ்ட்டை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் கேசரி பவுடர் மற்றும் எசன்ஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • இறுதியில் பாலானது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின் பூரிகளை அதனுள் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால், சுவையான பாதாம் பால் பூரி ரெடி.

Latest article