Saturday, May 18, 2024

சோள மாவு அல்வா!

தேவையான பொருட்கள்:


சோள மாவு – 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1 கப் + 1 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1/4 கப் (நறுக்கியது)
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:

  • முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே சமயம் வாணலியில் சிறிது நெய் ஊற்றி, முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், கலந்து வைத்துள்ள சோளமாவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  • அப்படி கிளறி விடும் போது, கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.
  • அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி ஒரு மணிநேரம் கழித்து அதனை துண்டுகளாக்கினால் சுவையான சோளமாவு அல்வா ரெடி.

Latest article