Sunday, September 22, 2024

வேளச்சேரியில் மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளான கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 01ஆம் தேதி திறந்து வைத்தார். சென்னை கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது.

இதனை கருத்தில் கொண்டு வேளச்சேரி, விஜயநகர் சந்திப்பில் 1.028 கி.மீ. நீளத்தில், ரூபாய் 67 கோடியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் ஓரடுக்கை மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நவம்பர் 01ஆம் தேதி அன்று திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த மேம்பாலம் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெரு நகரம் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கோயம்பேடு மற்றும் வேளச்சேரி 2 மேம்பாலங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் வேளச்சேரி விஜய நகர் பகுதிகளில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Latest article