Sunday, September 22, 2024

செட்டிநாட்டு கதம்ப சட்னி…

தேவையான பொருட்கள்:


உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
இஞ்சி – 1/4 இன்ச்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை, புதினா – 1/4 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளி – 1 சிறிய துண்டு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அதில் இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய் மற்றும் புளி சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அரைக்கவும்.
  • பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான செட்டிநாட்டு கதம்ப சட்னி தயார்.

Latest article